பதிவு செய்த நாள்
05 ஜன2020
00:16
சென்னை:சிட்டி யூனியன் வங்கி, அண்மையில், ‘ஆல் இன் ஒன்’ எனும் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம், வங்கியின் சேவைகளை, குரல் வழி உரையாடல் மூலம் எளிதாகப் பெற முடியும். அத்துடன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் உரையாடல் மூலம் வங்கிச் சேவையை பெற முடியும். இதனையடுத்து, நாட்டிலேயே, பல மொழிகளில் குரல் வழி வங்கிச் சேவையை வழங்கும் வங்கி என்ற சிறப்பையும், சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.
இந்த குரல் வழி சேவைக்கான செயலி மூலம், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு இருப்பு, பணப் பரிமாற்ற தகவல்கள், பணம் அனுப்புதல் உள்ளிட்ட, பல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த செயலி மூலமாக, மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது வரையிலான அனைத்து நிதி மற்றும் நிதிஇல்லாத வங்கி சேவைகளையும் பெற முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|