பதிவு செய்த நாள்
05 ஜன2020
00:17
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.
கடந்த, டிசம்பர், 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 252 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 45 ஆயிரத்து, 747 கோடி டாலராக உயர்ந்து, புதிய சாதனை உயரத்தை தொட்டு உள்ளது. இது, இந்திய மதிப்பில், 32.48 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 45 ஆயிரத்து, 747 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவாகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 45.60 கோடி டாலர் அதிகரித்து, 45 ஆயிரத்து, 495 கோடி டாலராக உயர்ந்திருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், இந்த உயர்வுக்கு முக்கிய காரணம், மொத்த இருப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 220.3 கோடி டாலர் அதிகரித்து, 42 ஆயிரத்து, 494 கோடி டாலராக உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பு, 26 கோடி டாலர் அதிகரித்து, 2,739 கோடி டாலராக உள்ளது.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|