பதிவு செய்த நாள்
05 ஜன2020
00:19
சென்னை:பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அரசிடமிருந்து, பங்கு மூலதனமாக, 4,360 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
நடப்பு நிதியாண்டில்,மத்திய அரசுக்கு, இந்நிறுவனத்தின் பங்குகளில் முன்னுரிமை ஒதுக்கீடு மூலமாக, வங்கி இந்த முதலீட்டை பெற்று உள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், நடப்பு நிதியாண்டில், 4,360 கோடி ரூபாயை, மூலதன நிதியாக பெற இருப்பதாக இவ்வங்கி தெரிவித்திருந்தது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மத்திய நிதியமைச்சகம், 3,800 கோடி ரூபாயை, பங்கு மூலதனமாக வழங்க இருப்பதாக தெரிவித்தது. பின்னர், மேலும், 560 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 4,360 கோடி ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர இழப்பு, 2,254 கோடி ரூபாயாகஅதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் தொடர்ச்சியாக, இவ்வங்கி, ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கைக்கு ஆளானது.
இதன்படி வங்கியின் வாராக் கடன் சுமையை, 6 சதவீதத்துக்கும் கீழே குறைக்க வேண்டும். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை நிறைவேற்ற தேவைப்படும் நிதிக்காக, மத்திய அரசின் நிதியுதவியை, இவ்வங்கி தற்போது பெற்றுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|