பதிவு செய்த நாள்
05 ஜன2020
23:36
விடைபெற்ற ஆண்டுடன் முடிந்த பத்தாண்டுகள், நிதி நோக்கில் முக்கியமானதாக
அமைந்திருந்தது. இந்நிலையில், வரும் பத்தாண்டுகளுக்கு நீண்ட கால
இலக்குகளை மனதில் கொண்டு திட்டமிடுவது, முதலீட்டின் பலன்களை
அதிகரித்து, வளத்தை பெருக்கி கொள்ள உதவும். வாழ்வியல் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பத்தாண்டுகளுக்கான நிதி திட்டமிடலை மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
எது
முக்கியம்: உங்கள் நீண்ட கால இலக்குகள் எவை என்பதை அறிவது மிகவும்
முக்கியம். பணியில் நுழைந்துள்ளவர்கள், இப்போதே சேமிப்பை துவக்கி,
அவசர கால நிதியை உருவாக்கி கொள்ள வேண்டும். பணியில் இருப்பவர்கள்,
வீட்டுக்கடனை அடைப்பது, ஓய்வு கால திட்டமிடலை முக்கியமாக கருத வேண்டும்.
பணவீக்கம்:
முதலீடு செய்யும் போது பணவீக்கத்தின் தாக்கத்தை கணக்கிட வேண்டும்.
வரும் பத்தாண்டில் சராசரி பணவீக்கம், முந்தைய பத்தாண்டை விட சற்று
குறைவாக
இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, வைப்பு நிதி,
பி.பி.எப்., போன்றவற்றின் பலனும் குறையலாம். ஆக, பணவீக்கத்தை மிஞ்சக்கூடிய முதலீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
காப்பீடு: ஒருவர் தனது வயது மற்றும் பணி வாழ்க்கைக்கு ஏற்ப காப்பீடு திட்டங்களை
பரிசீலிக்க வேண்டும். பணியில் சேர்ந்துள்ளவர்கள், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பெற வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தாங்கள் பெற்றுள்ள காப்பீடு போதுமானதாக இருக்கிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்.
சொந்த
வீடு: மத்திய தர வர்க்கத்தினருக்கு சொந்த வீடு என்பது முக்கிய
கனவு. புதிதாக பணி சேர்ந்துள்ளவர்களுக்கு சொந்த வீடு, முக்கிய
இலக்காக இருக்கும் என்றாலும், எப்போது சொந்த வீடு வாங்குவது என்பதை திட்டமிட வேண்டும். இந்த இலக்கிற்காக திட்டமிட்டு சேமிப்பது, வீட்டுக்கடன் சுமையை பெருமளவு குறைக்க உதவும்.
உயர் கல்வி: வாழ்வியல் செலவுகள் அதிகரிப்பதுடன் உயர் கல்விக்கான செலவுகளும்
அதிகரித்து வருகின்றன. எனவே, பிள்ளைகள் உயர் கல்வி செலவை சமாளிக்க போதுமான நிதியை உருவாக்குவது அவசியம்.இதற்கேற்ப திட்டமிட்டு, சரியான முறையில் முதலீடு
செய்ய வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|