பதிவு செய்த நாள்
05 ஜன2020
23:40
‘எஸ்.ஐ.பி.,
எனப்படும், ‘சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ முதலீடு எதிர்பார்த்த
பலனை அளிக்காமல் போகும் நிலை ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் பதற்றமடைய
தேவையில்லை’ என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் பண்ட்கள் மூலம் முதலீடு
செய்வது சராசரி முதலீட்டாளர்களுக்கு
ஏற்றதாக கருதப்படுகிறது. இதற்கு, எஸ்.ஐ.பி.,
எனப்படும், சீரான
முதலீட்டு திட்டம் ஏற்ற வழியாக அமைகிறது.இதில், முதலீட்டாளர்கள் தாங்கள்விரும்பும் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில், மாதம் குறிப்பிட்ட தொகையை சீராக
முதலீடு செய்யலாம்.சீரான சேமிப்பாக மட்டும்அல்லாமல் நீண்ட கால நோக்கில்நல்ல பலன் தரும் வகையில், எஸ்.ஐ.பி., முதலீடு அமைகிறது.
எஸ்.ஐ.பி., சாதகம்
குறைவான தொகையிலும் முதலீடு செய்யலாம் என்பது உள்ளிட்ட
பல்வேறு சாதகங்களை எஸ்.ஐ.பி., கொண்டுள்ளது. மேலும் சந்தையின் ஏற்ற
இறக்கம் பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாம்.ஏனெனில் சந்தை சரியும் போது, பங்குகள் விலை குறையும் என்பதால்
அதற்கேற்ப அதிக யூனிட்களை வாங்க முடியும். சந்தை எழுச்சி பெறும் போது இது பலன் தரும்.
எனவே, சந்தை நிலையை மீறி, எஸ்.ஐ.பி.,முதலீட்டை தொடர வேண்டும்என்று
வலியுறுத்தப்படுகிறது.ஆனால், தற்போது, எஸ்.ஐ.பி.,முதலீட்டாளர்கள்
பலர் கவலையில் உள்ளனர். ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்களில்,
எஸ்.ஐ.பி., மூலம் செய்யப்பட்ட முதலீடுகளில் சில,அண்மைக்காலத்தில் எதிர்பார்த்த பலனை தராமல் எதிர்முறைபலனை தருவதே இந்த
கலக்கத்திற்கு காரணம்.
மொத்தம்
உள்ள, 351 ஈக்விட்டி நிதி திட்டங்களில், 44 நிதிகள், கடந்த மூன்று
ஆண்டுகளில் எதிர்முறை பலனை அளிப்பதாக, ‘வேல்யூ ரிசர்ச்’ நிறுவன ஆய்வு
தெரிவிக்கிறது.எதிர்மறை பலன் என்பது நஷ்டத்தை குறிக்கும்
என்பதால், முதலீட்டாளர்கள், எஸ்.ஐ.பி., நிறுத்தி விடுவது
பற்றியும் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அச்சம் தவிர்!
எனினும்,
எதிர்மறை பலனால் அச்சம் அடைந்து, முதலீட்டில் இருந்து வெளியேறுவதை
தவிர்க்க வேண்டும் என்று வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.எஸ்.ஐ.பி.,
முறையில் எண்ணற்ற சாதகங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்ட்
திட்டங்களில் பலனுக்கு உறுதி அளிக்க முடியாது என்பதால், இடையே
நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
முதலீடு செய்துள்ள நிதியின் செயல்பாட்டிற்கு ஏற்ப பலன் அமையும்.நிதியில்
செயல்பாட்டை அறிய, முதலீட்டாளர்கள் அடிக்கடி அதன் செயல்பாட்டை
கண்காணித்து வர வேண்டும். பலன் குறைந்தால், அதற்கான காரணங்களை அறிய
வேண்டும். ஆனால்,
அவசரப்பட்டு வெளியேறக்கூடாது.தொடர்ந்து நிதியின் செயல்பாடு மோசமாக இருக்கும் போது, வெளியேறுவதை பரிசீலிக்கலாம். அதே நேரத்தில், நிதியின் செயல்பாட்டிற்கு
ஒட்டுமொத்த சந்தையின் மோசமான சூழலும், தாக்கமும்காரணம் எனில், முதலீட்டை தொடர்வதே சரியாக இருக்கும்.
பங்கு முதலீடு என்பது ஏற்ற இறக்கத்திற்கு
உள்ளாக கூடியது என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்கில்
முதலீட்டை தொடர்வது, பங்கும் முதலீட்டின் பலன் பெற முக்கிய அம்சம்.எஸ்.ஐ.பி,. மூலம் சமபங்கு நிதிகளில் முதலீடு செய்யும் போதும் இதை
மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|