பதிவு செய்த நாள்
05 ஜன2020
23:47
பங்குச் சந்தை
கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை கட்டுக்கோப்பிற்குள்அமைந்தது, நம் நாட்டின் நிதி நிலைக்கு பெரிதும் உதவியது.
உள்நாட்டில்
எரிபொருள் விலையை அதிகம் குறைக்காமல், அதன் மூலம் கிடைக்கும் வரி
உபரிப் பணத்தை, முதலீடு களாக அரசு செய்தது, நம் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.தனியார்
பெரு நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாமல் தவிக்கும் சூழலில்,
அரசின்
முதலீடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தன.முந்தைய
ஆட்சியில், பொருளாதாரம் சரியாமல் இருந்ததற்கு, அரசின்
முதலீட்டு திட்டங்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன. மறைமுகமாக,
கச்சா எண்ணெய் விலை இதற்கு பெரிதும் உதவியது.
தொய்வு
ஆனால், 2019ல் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், பொருளாதார வளர்ச்சி சரிய
துவங்கியது. நுகர்வு சார்ந்த தொய்வு இதற்கு முக்கிய காரணம்.இதன் பிரதிபலிப்பாக
உற்பத்தியிலும், மின் நுகர்விலும், சுரங்க உற்பத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த
இரு காலாண்டுகளில், ஒருபுறம் நுகர்வு குறைவதும், இன்னொரு புறம்
உற்பத்தி
சரிவைக் கண்டதும் நமக்கு பெரும் கவலையைத் தந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் தான், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் மீண்டும் தலை துாக்கி உள்ளது. அமெரிக்கா
மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில், போர் வலுக்கும் அபாயம்
மீண்டும் அதிகரிக்க நேர்ந்தால், அது உலக கச்சா சந்தையில் விலை
மீண்டும் உயரச் செய்யும் என்று, நுகர்வு நாடுகள்
அச்சப்படக்கூடும்.இறக்குமதியை நம்பி இருக்கும் நாடுகள், தங்கள் நிதி நிலை கெடாது இருக்க, கச்சா எண்ணெய் விலை, கட்டுக்கோப்பில் இருக்கவே
விரும்புவார்கள்.
இனி வரும் வாரங்கள், உலக கச்சா சந்தைக்கு கவலைகளை கொடுக்கக்கூடிய காலகட்டமாக அமையும். ஆனாலும்,
இன்றைய உலகச் சூழலில், இது போன்ற நிலைமைகள் குறுகிய
காலகட்டத்தில் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடும்.
குளிர்காலத்தில் துவங்கிய
பிரச்னைகள், குளிர் விடுவதற்குள்முடிந்தால், கோடை காலத்தில், கச்சா எண்ணெய் விலை, வீழ்ச்சியைக் கூட சந்திக்கலாம்.
சோதனை
எதையும்
கணிக்க முடியாத ஒரு சூழலில் கச்சா எண்ணெய் விலை இருக்கிறது. இனி வரும்
வாரங்கள், கச்சா எண்ணெய் சந்தைக்கு சோதனையான காலகட்டமாக அமையும்.
அதில் இருந்து மீண்டு வர, இந்தியா எப்படி முயற்சிக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நம் பொருளாதாரம், மேலும் பிரச்னைகள் அதிகரிக்காத வண்ணம் இந்த காலகட்டத்தை கடக்க வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|