பதிவு செய்த நாள்
07 ஜன2020
01:36
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை, புதிய பங்குகள் வெளியீட்டுக்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு, விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து, தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் லிமாயே கூறியதாவது:தேசிய பங்குச் சந்தையின் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு, செபிக்கு விண்ணப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைப்பதை பொறுத்து, நடப்பு ஆண்டில், செப்டம்பர் மாதத்தில், பங்கு வெளியீடு வருவதற்காக திட்டமிட்டுஇருக்கிறோம். இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுவதும் பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, எஸ்.பி.ஐ., அண்மையில் தன் வசமுள்ள தேசிய பங்குச் சந்தையின், 50 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது. தற்போது, எஸ்.பி.ஐ., வசம், 5.19 சதவீதம் அளவிலான தேசிய பங்குச் சந்தை பங்குகள் உள்ளன.மொத்தத்தில், தேசிய பங்குச் சந்தையின் பங்குதாரர்கள், தங்கள் வசம் உள்ள, 22 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|