பதிவு செய்த நாள்
07 ஜன2020
01:39
மும்பை:ஈரானுக்கும், அமெரிக்காவுக்குமான மோதல் பிரச்னை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை காரணமாக, நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சென்செக்ஸ், 788 புள்ளிகள் சரிவைக் கண்டது. மேலும், தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும், 234 புள்ளிகள் சரிவைக் கண்டது.சென்செக்ஸ் நேற்று மட்டும், 787.98 புள்ளிகள் சரிந்து, வர்த்தகம் முடிவில், 40676.63 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல், நிப்டியும் 233.60 புள்ளிகள் சரிந்து, வர்த்தகம் முடிவில், 11993.05 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்செக்ஸைப் பொறுத்தமட்டில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக, 4.63 சதவீதம் சரிவைக் கண்டது. இதை அடுத்து, எஸ்.பி.ஐ., இண்டஸ்இண்ட் பேங்க், மாருதி, எச்.டி.எப்.சி., ஹீரோ மோட்டோகார்ப், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகபட்ச சரிவைக் கண்டன.சந்தைகள் சரிவைக் கண்டபோதும், ‘டைட்டன், பவர்கிரிட்’ ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது.கச்சா எண்ணெய் விலை காரணமாக ஏற்பட்ட, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும் சந்தையை பாதித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|