பதிவு செய்த நாள்
07 ஜன2020
01:41
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, டிசம்பர் மாதத்தில், கடந்த, ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு, புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைத்தது முக்கிய காரணமாகும். இந்த புதிய ஒப்பந்தங்கள் மூலம், வணிகம் அதிகரித்ததுடன், புதிய வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அறிக்கை'நிக்கி - மார்க்கிட்' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த டிசம்பரில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், 'நிக்கி - ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,' குறியீடு, 53.3 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, நவம்பரில், 52.7 புள்ளிகளாக இருந்தது.இது, இந்த ஆண்டின், இரண்டாவது அதிகபட்ச வளர்ச்சியாகும். இதற்கு முன், ஜூலையில் அதிக வளர்ச்சியை கண்டிருந்தது சேவைகள் துறை.சேவைகள் துறை வளர்ச்சிக்கு, நல்ல சந்தை நிலவரமும், புதிய வணிக வளர்ச்சியும் உதவிகரமாக இருந்துள்ளது. மேலும், 2016ம் ஆண்டுக்குப் பின், கடந்த ஆண்டு இறுதியில், தொடர்ந்து மூன்று மாதங்களாக மொத்த விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.
விலை உயர்வுவிலையை பொறுத்தவரை, டிசம்பர் மாதத்தில், உள்ளீட்டு விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக உணவு, எரிபொருள், மருத்துவ பொருட்கள், போக்குவரத்து ஆகியவை விலை உயர்வுக்கு ஆளாகியிருக்கின்றன.கவலைப்படும் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து, சேவைகளுக்கான கட்டண பணவீக்கம், 22 மாத அதிகத்தை எட்டியிருக்கிறது. வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, புதிய வணிக ஒப்பந்தங்களால், சேவை நிறுவனங்கள், அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி உள்ளன.
இதையடுத்து, இத்துறையில் வேலைவாய்ப்பு, 28 மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எதிர்பார்ப்புசீரான சந்தை முயற்சிகளும், சாதகமான பொருளாதார நிலைமைகளும், நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என சேவை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இருப்பினும், நீண்ட கால சராசரியோடு ஒப்பிடும்போது, ஒட்டு மொத்த நேர்மறை எண்ணம் குறைவாகவே இருக்கிறது.உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, கலப்பு பி.எம்.ஐ., குறியீடு, நவம்பர் மாதத்தின், 52.7 புள்ளிகளிலிருந்து, டிசம்பர் மாதத்தில், 53.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இது, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகள் இரண்டினுடைய வளர்ச்சியையும் குறிப்பதாக அமைந்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் மந்த நிலை குறைந்திருப்பதையும் சேர்த்து பார்க்கும் போது, டிசம்பருடன் முடிவடைந்த, மூன்றாவது காலாண்டு அறிக்கைகள், இதற்கு முன் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரகாசமாக இருக்கக்கூடும் என இப்போது தோன்றுகிறது.பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|