பதிவு செய்த நாள்
07 ஜன2020
23:36
புதுடில்லி:இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 976 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதில், 800 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், 176 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முன்பாக, 300 கோடி ரூபாயை, பங்குகளை விற்பதன் மூலம் திரட்டவும், இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய பங்குகளை விற்பதன் மூலம் கிடைப்பதை வைத்து, இந்த தொகையை குறைத்துக் கொள்ளும் திட்டமும் இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகை, நிறுவனத்தின் மூலதன தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தப்படும். இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ் ஆகியவை நிர்வகிக்கின்றன.
கேரளாவைச் சேர்ந்த இந்த வங்கி, ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 16 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதற்கு, 403 கிளைகளும், 38 மிகச் சிறிய கிளைகளும் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|