பதிவு செய்த நாள்
07 ஜன2020
23:43
புதுடில்லி:கடந்த ஆண்டில், வீடுகள் விற்பனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள, 8 முக்கிய நகரங்களில், கடந்த ஆண்டில், வீடுகள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, நைட் பிராங் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னேற்றம்
இது குறித்து, இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆண்டில், முக்கியமான எட்டு நகரங்களில், 2.46 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, பொருளாதார மந்த நிலையையும் மீறி, ஒரு சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம், 2.46 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியிருக்கும் நிலையில், அதற்கு முந்தைய ஆண்டான, 2018ல், 2.42 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வீடுகளின் விலை மற்றும் அளவுகளை குறைத்து, கட்டுமான நிறுவனங்கள் விற்பனையை அதிகரித்து உள்ளன.
சென்னை, டில்லி தலைநகர் பிராந்தியம், பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் மும்பை, புனே, கோல்கட்டா ஆகிய நகரங்களில் விற்பனை சரிவை கண்டுள்ளது.
சரிவு
பெங்களூருவில் விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 48 ஆயிரத்து, 76 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.சென்னையைப் பொறுத்தவரை, விற்பனை, 6 சதவீதம் அதிகரித்து, 16 ஆயிரத்து, 959 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன.ஐதராபாத்தில் விற்பனை, 4 சதவீதமும், அகமதாபாத்தில், 3 சதவீதமும் அதிகரித்துள்ளன.கடந்த ஆண்டில், கோல்கட்டாவில், 12 சதவீதம் அளவுக்கு வீடுகள் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மொத்தம், 11 ஆயிரத்து, 266 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மும்பையில், 5 சதவீதம், புனேயில் 2 சதவீதம் என, விற்பனை சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஆண்டில், வீட்டு விலை சராசரியாக, 4 முதல், 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, விலை அதிகரிப்பு குறைவாகவே இருக்கிறது.புதிய குடியிருப்பு பகுதிகள் அறிமுகம், 23 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அலுவலகம்
அலுவலக பிரிவை பொறுத்தவரை, குத்தகைக்கு விடுவது, 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 6.06 கோடி சதுர அடி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையினரால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.புதிய அலுவலக இடங்கள், 56 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது மொத்தம், 6.13 கோடி சதுர அடியாகும்.மொத்தத்தில் கடந்த ஆண்டில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஷிஷிர் பைஜால்தலைவர் நைட் பிராங் இந்தியா
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|