தங்கம் விலை சவரன் ரூ.528 அதிகரிப்புதங்கம் விலை சவரன் ரூ.528 அதிகரிப்பு ...  தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் அடுத்த பட்டியல் தயாராகிறது தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் அடுத்த பட்டியல் தயாராகிறது ...
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல துறை மண்டலங்களாக மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2020
23:35

சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கப்பட்டவற்றை, பல துறை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றி, அதற்கான அறிவிப்பாணையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஏழு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், மின்னணு, மின்சாரம், பொறியியல், தோல், கிரானைட்ஸ் உள்ளிட்ட, எட்டு துறைகள் தொடர்பான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிப்காட் எனும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமும், சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில், பல துறைகளை சார்ந்த தொழில் நிறுவனங்களை அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:சிறப்பு பொருளாதார மண்டலத்தில், குறிப்பிட்ட துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தற்போது பல துறை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த பொருள் உற்பத்தி என்பது இல்லாமல், கூடுதலாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறை சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, இந்த பகுதியில் இடம் வழங்கப்படும்.தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 550 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)