பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:47
புதுடில்லி:‘நாட்டில், 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டுமானால், தொழிலாளர் உற்பத்தி திறன், 6.3 சதவீதமாக உயர வேண்டும்’ என, ‘இண்ட்ரா’ என்ற தரநிர்ணயம் மற்றும் நிதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், தொழிலாளர் உற்பத்தி திறன், 5.2 சதவீதமாக உள்ளது. இது, 6.3 சதவீதமாக உயர்ந்தால் மட்டுமே, எதிர்பார்க்கப்படும், 8 சதவீத பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என, இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் உற்பத்தி திறனை, 6.3 சதவீதமாக உயர்த்துவது ஒன்றும் முடியாத செயலல்ல; ஏற்கனவே, அந்த அளவை இந்தியா எட்டியுள்ளது.
எனினும், 2008 பொருளாதார மந்த நிலைக்குப் பின், குறிப்பாக, 2011 – 2015ம் நிதியாண்டில், தொழிலாளர் உற்பத்தி திறனில் பாதிப்பை சந்தித்த நாடுகள் பல உள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
இந்த காலகட்டத்தில், பொருள் உற்பத்தி, மின்சாரம், காஸ், தண்ணீர் வினியோகம், போக்குவரத்து, சரக்கு இருப்பு வைத்தல், தகவல் தொடர்பு துறைகளில் தொழிலாளர் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கவே செய்தது. எனினும், கட்டுமானம்,விவசாயம் மற்றும் சுரங்கத்துறை அடி வாங்கியது என, இண்ட்ரா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|