பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:52
புதுடில்லி:இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில், வாடிக்கையாளர்களுக்கான வாடகை கார்களை, ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும், ‘ஊபர்’ நிறுவனம், புதிதாக, ‘பின் வெரிபிகேஷன்’ பாதுகாப்பு முறையை, இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
நம் நாட்டில், ஊபரின் போட்டியாளராக கருதப்படும் ஓலா, 2018ல், ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் ரகசிய எண்ணை, வாடிக்கையாளர் மொபைல் போனுக்கு அனுப்பி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தது.அந்த எண்ணை, வாடகை கார் ஓட்டுனர், தன் காரில் உள்ள மொபைல் போன் ஆப்பில் டைப் செய்த பிறகே, வாடிக்கையாளர் விரும்பும் இடத்திற்கு வண்டியை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மிகவும் பாதுகாப்பான இந்த முறையை, ஊபர் இப்போது தான் சில நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, சச்சின் கன்யால் நேற்று கூறினார்.மேலும், ‘ரைடு செக்’ என்ற கூடுதல் பாதுகாப்பு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நீண்ட துார பயணங்கள் மற்றும் பெண்கள் தனித்து பயணம் செய்யும் நேரங்களில், ‘அல்ட்ரா சவுண்ட்’ முறையில், ‘பின்’ எண்ணை அனுப்பி, அதை வாகனம் ஓட்டும் ஓட்டுனர் பதிவிட்ட பிறகே, வண்டியை தொடர்ந்து இயக்க முடியும் என்ற வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|