பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:54
புதுடில்லி:பொதுவாக, வாகனங்கள் துறையின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கடந்த ஆண்டில் எட்டப்படவில்லை என்ற பேச்சு நிலவி வருகிறது.
எனினும், வாகன துறையில், திறன் வாய்ந்தவர்களுக்கான தேடல், 2019 நவம்பர் மாதத்தை விட, டிசம்பரில் உயர்ந்து இருந்தது என, தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதை, வாகன துறை தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கான நடவடிக்கையாக கருதலாம்.
‘பேட்டரி’யால் மட்டும் இயங்கும் வாகனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகையால், பேட்டரி வாகனங்களுக்கான உற்பத்தியில், வாகன துறை மும்முரம் காட்டி வருவதை விளக்கும் வகையிலும், இந்த முன்னேற்றம் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுபோல, திறனாளர்கள் தேடலில், உள்கட்டமைப்பு நிறுவனங்கள், இந்த காலகட்டத்தில், ௧௪ சதவீதம் கூடுதலாக இறங்கி இருந்ததையும், அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. சில குறிப்பிட்ட துறைகளில், ௨௫ ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்றவர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது என்றும் அது தெரிவிக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|