பதிவு செய்த நாள்
09 ஜன2020
23:58
மும்பை:நாட்டின் குறிப்பிட்ட, ௧௦ நகரங்களில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதியுதவியுடன் வீடு வாங்குவோருக்கு, 'குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் வழங்கப்படும்' என்ற உறுதியை, இந்த வங்கி அளிக்கிறது.
இது போன்ற உறுதியை, இந்திய வங்கிகள் எதுவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கவில்லை.நாட்டின் மிகப் பெரிய வணிக வங்கியான, எஸ்.பி.ஐ., தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ.,யில் வீடு வாங்க கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 'குறிப்பிட்ட காலத்தில், வீடுகள் தரப்படும்; மாற்றம் ஏற்பட்டால், பணம் திரும்பத் தரப்படும்' என்ற உறுதியை, இந்த வங்கி அளிக்கிறது.
இது குறித்து, எஸ்.பி.ஐ.,தலைவர் ரஜ்னிஷ்குமார் கூறும் போது, ''வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளை வழங்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு, கடன் வழங்குவதிலும் சலுகை காட்ட உள்ளோம்,'' என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|