தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்! ... தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு தங்கம் விலை இன்று(ஜன.,10) சவரன் ரூ.96 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சொகுசு கார் விற்பனை வீழ்ச்சி:2019ல் ஆடம்பர கார் விற்பனை, 'டல்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2020
00:05

புதுடில்லி:'பென்ஸ், பி.எம்.டபிள்யு., ஆடி' போன்ற ஆடம்பர கார்கள் விற்பனை, கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2019ல் வீழ்ச்சி அடைந்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஆடம்பர கார்கள் விற்பனை, 1.2 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. இதுவே, சீனாவில், 13 சதவீதம்; அமெரிக்காவில், 10 சதவீதம் உள்ளது. இந்தியாவில், 3.5 லட்சம் பெரும் பணக்காரர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆடம்பர கார் சந்தை, பெரிய அளவில் இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. ஆண்டுக்கு, 50 ஆயிரம் ஆடம்பர கார்கள் என்ற அளவில் தான் விற்பனையாகின்றன.

கடந்த, 2019ல், நாட்டில், 34 ஆயிரத்து, 500 முதல், 35 ஆயிரத்து, 500 ஆடம்பர கார்கள் விற்பனையாகியுள்ளன.அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது குறைவு. 2018ம் ஆண்டில், 40 ஆயிரத்து, 340 ஆடம்பர கார்கள் விற்பனையாகியுள்ளன.இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.


அதே நேரத்தில், இறக்குமதி வரி அதிகரிப்பும், ஆடம்பர கார்கள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆடம்பர கார்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த துறையினர் முன்வைக்கின்றனர்.மேலும், சுற்றுச்சூழல் மாசு தவிர்ப்பதற்கான, வாகனங்களில், 'பி.எஸ்., 6' தரச்சான்று, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாகிறது. இதனாலும், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

மெர்சிடஸ் பென்ஸ் ஆடம்பர கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ஸ்வெங்க், ''எங்களைப் பொறுத்தவரை, 2019ம் ஆண்டு சவாலான ஆண்டாகவே இருந்தது. ''எனினும், எங்கள்டீலர்களுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்,'' என்றார்.

அதே நேரத்தில், 'வால்வோ கார்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சார்லஸ் பிரம்ப், ''கடந்த ஆண்டின் ஆடம்பர கார் சந்தை விற்பனை குறைவை, வீழ்ச்சி என கூற மாட்டேன். என்னைப் பொறுத்தவரை, புதிய கார்களை வாங்குவதை, மக்கள் தள்ளிப் போட்டுள்ளனர். ''அதற்கு காரணம், வாகனங்களில் பின்பற்றப்பட உள்ள, பி.எஸ்., 6 தரம், இன்னும் சில மாதங்களில் அமலாக உள்ளது. அதற்குப் பின், புதிய கார்களை வாங்கிக் கொள்ளலாம் என உள்ளனர். கண்டிப்பாக, ஏப்ரலுக்கு பின், விற்பனை மேம்படும்,'' என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)