பதிவு செய்த நாள்
12 ஜன2020
00:00
புதுடில்லி:அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை, மேலும் தளர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த முயற்சியில் இறங்க அரசு திட்டமிட்டுள்ளது.
நேரடி முதலீடு
இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகளை மேலும் தளர்த்த உள்ளது. விமான போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகம் வரும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு, 49 சதவீதம் என்பதை, 74 சதவீதமாக அதிகரிக்கலாம் என, மத்திய வர்த்தக துறை ஆலோசனை வழங்கி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், ஆலோசனை செய்யப்படுகிறது.இவை தவிர, ரயில் போக்குவரத்து, கல்வி, வாடகை வீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனையில் உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி
நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கை, 6 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.தற்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு, 2 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|