பதிவு செய்த நாள்
12 ஜன2020
00:03
சென்னை:கடந்த ஆறு மாதங்களில், நாட்டின் தங்க ஆபரணங்கள் வணிகம், 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த கவுன்சிலின் தலைவர், அனந்த பத்மநாபன் கூறியதாவது:கடந்த ஆறு மாதங்களில், வணிகம், 30 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்த சரிவுக்கு சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய வரிகள் அதிகரித்தது முக்கிய காரணம் ஆகும். மேலும், அதிக வரிவிதிப்பு காரணமாக, தங்க கடத்தலும் அதிகரித்துவிட்டது.
இத்தகைய சூழலில், நுகர்வோர் பலர், இந்தியாவில் வாங்குவதை விட்டுவிட்டு, துபாய், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வாங்க துவங்கினர். வரும் பட்ஜெட்டில், மத்திய அரசு, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது, 12.5 சதவீதமாக இருக்கும் வரியை, 6 சதவீதமாக குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|