பதிவு செய்த நாள்
12 ஜன2020
00:04
மும்பை:நாட்டில், நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குவது, கடந்த டிசம்பரில், 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பை அதிக அளவில் கொடுத்திருப்பது, தகவல் தொழில்நுட்ப துறை தான். நாகுரி ஜாப்ஸ்பீக் இண்டெக்ஸ் குறித்து, நாகுரி டாட் காம் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறியதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த பணியமர்த்தல் நடவடிக்கை, கடந்த டிசம்பரில், 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் தொடர்ந்து, ஐதராபாத்தும், பெங்களூருவும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த ஆறு மாதங்களாக, இம்மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சியை காட்டி வருகின்றன.
கடந்த ஆண்டை எடுத்து கொண்டால், பிற துறைகளை விட தகவல் தொழில்நுட்ப துறை, 28 சதவீத வளர்ச்சியை அதிகமாக காட்டியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டில், பி.பி.ஓ., துறை, 27 சதவீதமும், மருந்து துறை, 18 சதவீதமும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் துறை, 18 சதவீதமும் பங்களிப்பு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|