பதிவு செய்த நாள்
14 ஜன2020
23:40
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்றும் புதிய உச்சத்தை தொட்டன.
நேற்று வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 41994.26 புள்ளிகளை தொட்டு, புதிய சாதனை படைத்தது. பின், வர்த்தக முடிவில், 92.94 புள்ளிகள் அதிகரித்து, 41952.63 புள்ளிகளில் நிலை பெற்றது.இதே போல் நிப்டியும், வர்த்தகத்தின் இடையே புதிய சாதனை அளவான, 12374.25 புள்ளிகளை தொட்டது. பின், வர்த்தகம் இறுதியில், 32.75 புள்ளிகள் அதிகரித்து, 12362.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப், 2.15 சதவீதம் அதிகரித்து, அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக இருந்தது. இதையடுத்து, ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி., – டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் கண்டன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் பேங்க், எஸ்.பி.ஐ., – எல்., அண்டு டி., – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆகியவை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|