பதிவு செய்த நாள்
16 ஜன2020
01:33
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், வீடுகள் விற்பனை, 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக, பிராப்டைகர் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 9 முக்கிய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை, 30 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்ட தேவைகள் குறைவால், மதிப்பீட்டு காலத்தில், 64 ஆயிரம் பிளாட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலத்தில், 91 ஆயிரத்து 464 வீடுகள் விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாதங்களில், வீடுகள் விற்பனை, 13 சதவீதம் அளவுக்கு குறைந்து, மொத்தம், 2.28 லட்சம் வீடுகளே விற்பனை ஆகியுள்ளன.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், மொத்தம், 2.63 லட்சம் வீடுகள் விற்பனை ஆகியிருந்தன.சென்னையை பொறுத்தவரை, 33 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக, பெங்களூருவில், 50 சதவீதம் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|