பதிவு செய்த நாள்
17 ஜன2020
05:47
புதுடில்லி: தேவை மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும் வகையில், அடுத்த ஆறு மாதத்துக்கு, ஜி.எஸ்.டி.,யின் அனைத்து பிரிவிலும், 25 சதவீதம் குறைக்க வேண்டும் என, இந்திய வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, ‘அசோசெம்’ கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, அசோசெம் அமைப்பின் தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சிக்கு என்னுடைய ஆலோசனை, முதலில், ஜி.எஸ்.டி.,யின் அனைத்து நிலைகளிலும், 25 சதவீதத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைக்க வேண்டும்.
இதனால், அரசுக்கு கூடுதலாக, 1.20 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும். .எஸ்.டி.,யை குறைத்தால் நிச்சயமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த பற்றாக்குறை பெரிய பிரச்னையாக இருக்காது.
அனைத்துப் பிரிவிலும், வரியை குறைப்பதன் மூலம், வணிகங்கள் வரி செலுத்த முன் வரும். இது, வரியை அதிகரிப்பதால் கிடைக்கும் வருவாயை விட நிச்சயம் அதிகமாக இருக்கும். இந்த முயற்சியால், நாட்டில் தேவையும், முதலீடும் அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சியை துாண்டுவதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|