பதிவு செய்த நாள்
18 ஜன2020
04:25
திருப்பூர்: நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், டிசம்பரில், 3 சதவீதம் உயர்ந்தது.
இந்த நிதியாண்டில், ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்திருந்த ஏற்றுமதி, ஜூன் முதல், நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சரிவை சந்தித்தது. இதன் பின், டிசம்பரில், மீண்டும் ஏற்றுமதி, வளர்ச்சி நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த நிதியாண்டு டிசம்பர் மாதத்தில், 9,721 கோடி ரூபாயாக இருந்த ஆடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டு டிசம்பரில், 10 ஆயிரத்து, 20 கோடியாக உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 3.09 சதவீதமும்; டாலரில், 2.42 சதவீதமும் உயர்வாகும்.
கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களுடன், இந்த நிதியாண்டின் ஒன்பது மாதத்தை ஒப்பிடும்போது, ஆடை ஏற்றுமதி, 80 ஆயிரத்து, 494 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆயத்த ஆடைகளில், பின்னலாடைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.கடந்த நிதியாண்டில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 54 ஆயிரத்து, 650 கோடி ரூபாயாக இருந்தது; இந்த நிதியாண்டில், ஒன்பது மாதங்களில், 40 ஆயிரத்து, 247 கோடி ரூபாயாக உள்ளது. பின்னலாடை ஏற்றுமதியில், கடந்த நிதியாண்டில் எட்டப்பட்ட மதிப்பளவு, இந்த நிதியாண்டில் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|