பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா., பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா., ...  தொடர்ந்து பெருகி வரும் அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து பெருகி வரும் அன்னிய செலாவணி இருப்பு ...
வளர்ச்சி பாதையில் தங்க கடன் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2020
01:01

புதுடில்லி: நாட்டின் தங்கக் கடன் சந்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 4.62 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சி பெறும் என, கே.பி.எம்.ஜி., ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது

.இந்த ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த நிதியாண்டில், தங்கம் மீதான கடன் வழங்கும் நிறுவனங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அதிக அளவுக்கு விரிவாக்கம் செய்துள்ளன.இந்நிலையில், தங்கக் கடன் சந்தை வளர்ச்சி விகிதம், 13.4 சதவீதமாக இருக்கும்.தங்கக் கடன் பிரிவில், ‘ஆன்லைன்’ மற்றும் ‘டிஜிட்டல்’ வசதிகளின் காரணமாக, வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் தேடி வந்து, கடன் வழங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, தங்கக் கடன் சந்தையில், 35 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

தற்போதைய தங்கக் கடன் நிறுவனங்கள், அத்துறை சார்ந்த பிற நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் பலத்த போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.ஒழுங்கமைக்கப்பட்ட தங்கக் கடன் துறையை விட, ஒழுங்கமைக்கப்படாத துறையின் அளவு, மூன்று மடங்கு பெரிதாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, தங்கக் கடன் வழங்கும் பெரிய நிறுவனங்கள், அடுத்த கட்டமாக, நுண் கடன் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட பிரிவுகளிலும் கால்பதித்து வருகின்றன.முன்னர், வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கும், வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவதற்கும்கூட, தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெற வேண்டியதாக இருந்தது.

இப்போது இத்தகைய காரணங்களுக்காக, தங்கத்தை அடமானமாக வைக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.அண்மை காலத்தில், தங்கத்தின் விலை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மிக கவனத்துடன் தங்கக் கடன் வழங்க வேண்டியதிருக்கிறது. விலை ஓரளவு நிலை பெறும் வரை இந்த சிக்கல் உள்ளது.

மேலும், சர்வதேச அளவிலும் விலையில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதால், தங்கத்தின் மீது, நீண்ட கால கடன் வழங்குவதும் சிக்கலாகி இருக்கிறது.இதையடுத்து, தங்கத்தின் மதிப்பை விட மிகவும் குறைந்த அளவிலும், குறைந்த கால அவகாசத்திலும் கடன்களை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கத்தின் விலையில், ஏற்ற – இறக்கங்கள் பெரிய அளவில் அடிக்கடி ஏற்படுவதன் காரணமாக, நீண்ட கால கடன்கள் வழங்குவது சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)