திசை மாறும் முதலீடுகள் திசை மாறும் முதலீடுகள் ...  சென்னையில் சர்வதேச தோல் கண்காட்சி சென்னையில் சர்வதேச தோல் கண்காட்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீடு: ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:21

புதுடில்லி: ஐ.ஆர்.எப்.சி., எனும், இந்திய ரயில்வே நிதிக் கழகம், புதிய பங்குகளை வெளியிட அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில், 140.71 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 93.80 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.இந்த பங்குகள் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, மூலதனத்தை பெருக்கிக் கொள்ளவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.டி.எப்.சி., செக்யூரிட்டீஸ், எச்.எஸ்.பி.சி., செக்யூரிட்டீஸ் அண்டு கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.இந்நிறுவனப் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம், இந்திய ரயில்வேயின், நிதி சார்ந்த விஷயங்களை கையாண்டு வருகிறது. மூலதனச் சந்தைகள், பிற கடன்கள் மூலம் விரிவாக்கம் மற்றும் இந்திய ரயில்வே இயங்குவதற்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)