இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி:  அமெரிக்காவின் தீவிர முயற்சி இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி: அமெரிக்காவின் தீவிர முயற்சி ...  புதிய பங்கு வெளியீடு பஜ்ரங் பவருக்கு அனுமதி புதிய பங்கு வெளியீடு பஜ்ரங் பவருக்கு அனுமதி ...
63 பேரின் சொத்து மதிப்பு நாட்டின் பட்ஜெட்டை விட அதிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:31

டாவோஸ்: –நம் நாட்டின், ஒரு சதவீத செல்வந்தர்களின் சொத்து மதிப்பு, 70 சதவீத ஏழைகளின் மொத்த சொத்தவிட, நான்கு மடங்கு அதிகம் என, ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின், 50வது ஆண்டு கூட்டத்தில், ‘கவனிப்பதற்காக நேரம்’ என்ற தலைப்பில், ஆக்ஸ்பாம் அமைப்பு, ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் உள்ள, 1 சதவீத செல்வந்தர்களின் சொத்து மதிப்பு, அந்நாட்டின், 95.3 கோடி ஏழைகளின் சொத்து மதிப்பை விட, நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது.இந்த, 95.3 கோடி வறியவர்கள் எண்ணிக்கை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதமாகும். மேலும், நாட்டின் பெரும் பணக்காரர்கள் அனைவரது மொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் முழு ஆண்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாகும்.இந்தியாவில் இருக்கும், 63 செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு, 2018 – 19ம் ஆண்டின் பட்ஜெட் தொகையான, 24.42 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாக இருக்கிறது.

உலகளாவிய சமத்துவமின்மை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்து உள்ளது.உள்நாட்டு வருமான சமத்துவமின்மை, பல நாடுகளில் குறிப்பாக, முன்னேறிய நாடுகளில் உயர்ந்துள்ளது. சில நாடுகளில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)