பதிவு செய்த நாள்
22 ஜன2020
06:35
விருப்ப ஓய்வில், 79 ஆயிரம் ஊழியர்கள் வெளியேறிய பின், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து, அதன் நிர்வாக இயக்குனர், அனைத்து வட்ட தலைமை பொது மேலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.பொதுத் துறையை சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டதும், விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை ஏற்று, 79 ஆயிரம் ஊழியர்கள், விருப்ப ஓய்வில் செல்ல, விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களின் பணிக் காலம், இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். இதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்து, பி.எஸ்.என்.எல்., வட்டங்களின் தலைமை பொது மேலாளர்களுடன், நிர்வாக இயக்குனர் புர்வார், இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அதில், வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட எந்தெந்த துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம், எந்த பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|