ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்  ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டம் ...  ரூ.19 கோடி நிதி திரட்டியது ‘சமோசா சிங்’ நிறுவனம் ரூ.19 கோடி நிதி திரட்டியது ‘சமோசா சிங்’ நிறுவனம் ...
வீடு வாங்குவோருக்கு வரிச் சலுகை வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
05:34

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தேவையை அதிகரிக்க உதவும் வகையில், வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து, இக்கூட்டமைப்பு மேலும் கூறிஉள்ளதாவது:பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது, இந்திய ரியல் எஸ்டேட் துறை. இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையில் தேவையை மேலும் அதிகரிக்க உதவியாக, வீடு வாங்குவோருக்கு, அதிக வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

திட்டம்

இத்துறையின் தேவையை அதிகரிப்பதன் மூலமாக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை குறைந்தபட்சம், 6 முதல், 7 சதவீதமாக அதிகரிக்கலாம். எனவே, அதற்கு உதவும் வகையிலான உறுதியான திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.இத்துறையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது மற்றும் தேவையை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.இதன் காரணமாக, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ், வீடு வாங்குபவர்களின் வருமான வரம்பை அதிகரிக்கவும், வீடு வாங்குபவர்களுக்கு, வரிச் சலுகைகளை அதிகரிக்கவும் அரசை வலியுறுத்தி உள்ளோம்.மேலும், பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளின் ஒரு பகுதியாக, இந்த துறையை உயர்த்துவதற்கான செயல்திட்டமும் எங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பொறுத்தவரை, குறைந்த பட்சம், 6 முதல், 7 சதவீத வளர்ச்சியை பெற, ரியல் எஸ்டேட் துறையில் தேவையை அதிகரிக்க வேண்டும்.

வட்டி

அதற்கு, அரசு ஒரு தீர்மானமான திட்டத்தை வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த துறையில் தேவைகள் அதிகரிக்கும்போது, முறையான மற்றும் முறைசாரா துறைகளில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அது, நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதில் முக்கிய பங்களிக்கும்.வீட்டுக் கடனை பொறுத்தவரை, வீட்டுக் கடனின் வட்டிகளுக்கு அதிகபட்ச விலக்கை, 2 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.

மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், எம்.ஐ.ஜி., ஒன்று மற்றும் இரண்டு பிரிவுகளில் உள்ள வருமான அளவுகோலை, 12 மற்றும் 18 லட்சம் ரூபாயிலிருந்து, 18 மற்றும் 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.இதன் மூலம் பரந்துபட்ட மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர். இது, வீடுகளுக்கான தேவையை அதிகரிக்க உதவும். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இவ்வாறு இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)