பதிவு செய்த நாள்
25 ஜன2020
06:46
மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, கட்டமைப்புகளில் அதிக சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தேவை மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்க கூடுதல் நிதி நடவடிக்கைகள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை எடுக்கப்பட வேண்டும் என, சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.சீர்திருத்தம்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கி எடுக்கும் நிதிக் கொள்கைகளுக்கு, அதற்கான வரம்புகள் இருக்கின்றன. எனவே, கட்டமைப்பில் சீர்திருத்தங்கள், நிதி நடவடிக்கைகள் ஆகியவை தொடர வேண்டும்.
இதன் மூலம், வளர்ச்சி மற்றும் தேவையை அதிகரிப்பதற்கான உந்துதலை அளிக்க முடியும்.தற்போதைய பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வது என்பது, மத்திய வங்கிகளின் முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது.ரிசர்வ் வங்கி, வருகின்ற தரவுகள் மற்றும் ஆய்வுகள் மூலம், தொடர்ந்து பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டை மேம்படுத்தி வருகிறது.அணுகுமுறைஇந்த அணுகுமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளுக்கு உதவியாக இருக்கிறது. இதனால், மந்தநிலையை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|