பதிவு செய்த நாள்
26 ஜன2020
02:52
சென்னை, : ‘‘நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்திய வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,’’ என, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்தார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1,919 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 1,147 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 152 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,506 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, 5,269 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் மொத்த வணிகம் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மொத்த வாராக் கடன், 7.20 சதவீதமாக குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டில், 7.46 சதவீதமாக இருந்தது. இதே போல, நிகர வாராக் கடன், 4.42 சதவீதத்திலிருந்து, 3.50 சதவீதமாக குறைந்துள்ளது.இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
வங்கியின் பெயரை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை. ஏப்.,1 முதல், இரண்டு வங்கிகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு பத்மஜா சுந்துரு கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|