ரூ.25 ஆயிரம் கோடி ‘பதஞ்சலி’ இலக்கு ரூ.25 ஆயிரம் கோடி ‘பதஞ்சலி’ இலக்கு ...  ‘ஸ்மார்ட் போன்’ சந்தையில் இந்தியா சாதனை ‘ஸ்மார்ட் போன்’ சந்தையில் இந்தியா சாதனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் வங்கி நிகர லாபம் 62 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
02:52

சென்னை, : ‘‘நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், இந்திய வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,’’ என, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தெரிவித்தார்.

இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1,919 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 1,147 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 152 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,506 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது, கடந்த ஆண்டு, 5,269 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் மொத்த வணிகம் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மொத்த வாராக் கடன், 7.20 சதவீதமாக குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டில், 7.46 சதவீதமாக இருந்தது. இதே போல, நிகர வாராக் கடன், 4.42 சதவீதத்திலிருந்து, 3.50 சதவீதமாக குறைந்துள்ளது.இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.


வங்கியின் பெயரை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை. ஏப்.,1 முதல், இரண்டு வங்கிகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு பத்மஜா சுந்துரு கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)