பதிவு செய்த நாள்
28 ஜன2020
06:07
புதுடில்லி : மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பர்னிச்சர் பொருட்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர் பொருட்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகிறது.உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதற்கும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடுக்கப்படவும், இத்தகைய இறக்குமதி கட்டுப்பாடுகள் உதவும் என, அரசு கருதுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 4,280 கோடி ரூபாய் மதிப்பில், பர்னிச்சர் இறக்குமதி நடைபெற்றுள்ளது. இதில், சீனாவிலிருந்து மட்டும், 2,208 கோடி ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்கள் இறக்குமதி ஆகியுள்ளன.
சீனா தவிர, மலேஷியா, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும், அதிக அளவில் பர்னிச்சர் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.பர்னிச்சர் துறை, இந்தியாவைப் பொறுத்தவரை, அமைப்பு சாரா துறையாக திகழ்வதால், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகவும் பலகீனமான ஒன்றாக இருக்கிறது.இந்தியாவின் உள்நாட்டு பர்னிச்சர் தொழில், 35 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். ஏற்றுமதி மதிப்பு, 10 ஆயிரத்து, 650 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|