செபி தலைவர் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இல்லைசெபி தலைவர் தியாகிக்கு பதவி நீட்டிப்பு இல்லை ... தங்கம் விலை சவரன் ரூ.296 சரிவு - வெள்ளி கிலோ ரூ.2000 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.296 சரிவு - வெள்ளி கிலோ ரூ.2000 சரிவு ...
அசுர வேகமெடுக்கும் உணவு தொழில்நுட்ப துறை;இந்தியாவில் முதலீடுகள் 35% அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
03:01

புதுடில்லி : இந்தியாவில், உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி காணும் என, கூகுள் அண்டு போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளதாவது:உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில், இந்தியாவில், கூட்டு ஆண்டு வளர்சி விகித அடிப்படையில், 25 சதவீத வளர்ச்சி பெறும். இது, 2022ம் ஆண்டு இறுதியில், கிட்டத்தட்ட 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சியுறும்.இதற்கு, அதிகரித்துள்ள இணைய பயன்பாடு, உணவு ஆர்டர் கொடுப்பது அதிகரிப்பு, சாதகமான நுகர்வோர் மனநிலை ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

கடந்த, 5 ஆண்டுகளில், இந்த உணவு தொழில்நுட்ப பிரிவில், முதலீடுகள், 35 சதவீதம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும், இணைய வசதி பெருக்கம், சிறிய நகரங்களுக்கும் விரிவடைதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், இந்தியா முழுக்க இந்த துறை வளர்சியை துாண்டுவதாக இருக்கும்.

6 மடங்கு வளர்ச்சி:

உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து, 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 6 மடங்கு வளர்ந்துள்ளன.அதேசமயம், நுகர்வோர்களும், உணவு ஆர்டர் செய்வது, தேடுவது உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யும் நேரமும், இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த செலவிடும் நேரம், 2017ல், மாதத்துக்கு, 32 நிமிடங்களாக இருந்தது, 2019ல், மாதத்துக்கு, 72 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக உணவை, முதல் முறை ஆர்டர் செய்வதற்கு, தகவல் தொடர்பு வசதிகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் பங்கு, 52 சதவீதமாகும்.இதனையடுத்து, விளம்பரங்கள், 19 சதவீதமாக இருக்கிறது. பெருநகரங்களில் இருப்போர், உயர் வருமான பிரிவினர் ஆகியோர் மீது விளம்பரங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில் புதியதாக இருந்தாலும், மிக வேகமாக இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இந்த உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில், 500க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளனர். நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

சாப்பாட்டில் ஒரு புரட்சி:

மேலும், ஆன்லைன் மூலமாக செலவழிப்பது, அடுத்த, 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து, 9.25 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.இருப்பினும், தற்போது, ஐந்தில் ஒருவர் மொபைல் செயலி மீது நம்பிக்கை குறைவுடன் இருக்கிறார்.இதுவரை ஆன்லைன் மூலம் முயற்சிக்காகததற்கு, வினியோகக் கட்டணம் காரணமென, 18 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர், தரம் காரணம் என, 13 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

முதல் நிலை நகரங்களில், 29 சதவீதம் பேர், செயலி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஆன்லைன் ஆர்டர் செய்வதில்லை என தெரிவித்துள்ளனர்.இந்த உணவு தொழில்நுட்பம், இந்தியர்களின் சாப்பாட்டில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது. தற்போது ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)