பதிவு செய்த நாள்
30 ஜன2020
02:14
புதுடில்லி : துரித உணவு நிறுவனமான, ‘பர்கர் கிங்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
‘பர்கர் கிங்’ நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், புதிய பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, பரிசீலனைக்கு பின், செபி தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், 400 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 6 கோடி ரூபாய்க்கு, கியூ.எஸ்.ஆர்., ஆசியா நிறுவனம் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியில், புதிய நிறுவனம் ஒன்றை துவக்கவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஜே.எம்., பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.கடந்த ஜூன் மாத நிலவரப்படி, பர்கர் கிங் நிறுவனத்துக்கு, 16 மாநிலங்களில், 47 நகரங்களில் மொத்தம், 202 உணவகங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|