ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது ஜி.எஸ்.டி., அவகாசம் நாளை முடிகிறது ...  நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் நடப்பு ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் ...
சென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2020
02:30

சென்னை : சென்னையில் நடைபெறும், மூன்று நாள் தோல் கண்காட்சி வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, இந்திய தோல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தோல் கவுன்சில் தலைவர் பி.ஆர்.அகீல் அகமது, செயல் இயக்குனர் ஆர்.செல்வம் இருவரும் கூறியதாவது:‘இந்திய தோல் வாரம் 2020’ ஜனவரி, 27 முதல் பிப்ரவரி, 3ம் தேதி வரை கடைப்பிடிக்கப் படுகிறது. சந்திப்புஇதன் ஒரு பகுதியாக, 35வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, நாளை முதல், பிப்., 3ம் தேதி வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.


இந்தியாவைச் சேர்ந்த, 350 நிறுவனங்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த, 150 நிறுவனங்களும், இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்கின்றன.இதில், தோல் தொழில் தொடர்பான மூலப்பொருட்கள், பணி நிறைவுற்ற பொருட்கள், உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் என, அனைத்தும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, 2,400 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கிறோம்.மேலும், பிப்., 1ம் தேதி, தோல் மூலப்பொருட்கள் ஆதார சந்திப்பும் நடைபெறுகிறது.


இதில், இந்திய நிறுவனங்கள் மற்றும் 30 வெளிநாட்டு தோல் வினியோகஸ்தர்களும் சந்தித்து பேசுகின்றனர்.வேலைவாய்ப்புதமிழகத்தில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டில், சில நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்துள்ளன.அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தோல் தொழிற்சாலைகள் துவங்க, 100 ஏக்கர் நிலம் ஒதுக்க, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பர்கூர், திண்டிவனம், காட்பாடி, இருங்காட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளில் நிலம் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.தொழில் துவங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்ததும், அங்கு நிறுவனங்கள் தொழில் துவங்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)