பதிவு செய்த நாள்
31 ஜன2020
05:32
சென்னை: ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஸ்ரீபெரும்புதுார் உற்பத்தி பிரிவில் இருந்து, ஏற்றுமதிக்காக, அதன், 30 லட்சமாவது காரை தயாரித்துள்ளது
.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ், கிம் கூறியதாவது:எங்கள் ஏற்றுமதியை, 1999ம் ஆண்டில் துவங்கினோம். முதன் முதலாக, 20 சான்ட்ரோ கார்களை, நேபாளத்துக்கு ஏற்றுமதி செய்தோம்.பின், 2004ல் ஏற்றுமதி, ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டது. 2008ல், 5 லட்சத்தை எட்டியது.
அடுத்து, 2010 பிப்ரவரியில், 10 லட்சமாவது காரையும், 2014ல், 20 லட்சமாவது காரையும் ஏற்றுமதி செய்தோம்.கடந்த ஆண்டில் மட்டும், 1.81 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளோம். தற்போது, 30 லட்சம் என்ற உச்சத்தை அடைந்துள்ளோம்.இந்த 30 லட்சமாவது கார், சமீபத்திய அறிமுகமான, ’ஹூண்டாய் ஆரா’ கார் ஆகும். இந்த கார், ’கிராண்டு ஐ 10’ என மறுபெயரிடப்பட்டு, கொலம்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|