தொடர் சாதனை ஏற்றத்தில் அன்னிய செலாவணி இருப்பு தொடர் சாதனை ஏற்றத்தில் அன்னிய செலாவணி இருப்பு ...  வளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ கணிப்பு ...
இளம் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2020
23:47

எதிர்கால இலக்குகளை அடைய திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். மேலும், வாழ்க்கையில் நிதி சுதந்திரம் பெறவும் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். இளம் தலைமுறையினரை பொருத்தவரை பல விஷயங்களில் நன்கறிந்தவர்களாக இருந்தாலும், முதலீடு என்று வரும் போது அவசரம், பொறுமையின்மையை கொண்டுள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய நிதி தவறுகளை தவிர்க்கும் வழிகள்:

இளம் வயதில் முதலீடு:

சேமிப்பதும், முதலீடு செய்வதும் வயதானவர்களுக்கான என கருதுவது தான், பெரும்பாலான இளம் தலைமுறையினர் செய்யும் முக்கிய தவறாகிறது. இளம் வயதில் முதலீடு செய்வதன் மூலம், நீண்ட கால நோக்கில் மறுமுதலீட்டின் பலனை முழுவதும் பெறலாம்.

ஈர்க்கும் கடன்:

கடந்த தலைமுறையினருக்கு இருந்ததை விட, இளம் தலைமுறையினருக்கு நிதி தகவல்களை நாடும் வசதி அதிகம் உள்ளது. அதே போல கடனுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. உடனடி கடன் கிடைத்தாலும், வாழ்க்கைத்தேவைகளை கடனில் நிறைவேற்றும் பழக்கம் ஏற்றது அல்ல. தேவைகளுக்காக, திட்டமிட்டு சேமிக்க பழக வேண்டும்.

செலவு பழக்கம்:

கடன் பழக்கம் போலவே செலவு பழக்கம் கட்டுப்பாடில்லாமல் இருக்கிறது. விருப்பங்களையும், கனவுகளையும் உடனே நிறைவேற்றிக்கொள்ள துடிக்கின்றனர். இன்று செலவு செய்வோம், சேமிப்பை பின் பார்த்துக்கொள்ளலாம் என்பது பாதகமானது. செலவு செய்யும் முன் சேமிப்புக்கு பணம் ஒதுக்க வேண்டும்.

‘ரிஸ்க்’ தேவை:

கடந்த தலைமுறையினர் பெரும்பாலும் வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நாடினர். இவை நிலையான பலன் அளித்தாலும், வளர்ச்சி வாய்ப்பை கொண்டிருக்கவில்லை. நிதி உலகில் ரிஸ்கே எடுக்காமல் இருப்பதும் ஒரு ரிஸ்க் தான். இளம் வயதில், பங்கு முதலீடு போன்றவற்றை கவனமாக மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

காப்பீடு எங்கே?

முதலீட்டை துவக்கும் முன் காப்பீடு பெற்றிருக்க வேண்டும். இளம் வயது தானே ஆகிறது, அதற்குள் காப்பீடு எதற்கு என நினைப்பது தவறு. இளம் வயதில் பாலிசி பெறும் போது, பிரிமியம் குறைவாக இருக்கும். எதிர்கால பாதுகாப்பு அளிக்கும். பணி புரியும் நிறுவனம் அளிக்கும் மருத்துவ காப்பீடு மட்டும் போதும் என்பதும் தவறு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)