தென்னை நார் பலகை: 2 லட்சம் பேருக்கு வேலை: மரங்களும் தப்பிக்கும், நாட்டுக்கும் வருவாய்!தென்னை நார் பலகை: 2 லட்சம் பேருக்கு வேலை: மரங்களும் தப்பிக்கும், ... ... தொழில் துவங்குவது எளிது! தொழில் துவங்குவது எளிது! ...
‘பஞ்சு’ விவகாரம், ‘லேசு’ இல்ல!கோவை மில்கள் கோரிக்கையை ஏற்குமா, சி.சி.ஐ.,?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
17:03

‘தென்­னிந்­தி­யா­வின் மான்­செஸ்­டர்’ ஆன கோவைக்கு, பஞ்­சா­லை­கள் ஆதா­ரம் என்­றால், இவற்­றுக்­குப் பஞ்சு தான் ஆதா­ரம். ஆனால், பஞ்­சுக்கே பிரச்னை என்­றால், இந்த ஆலை­கள் என்ன செய்­யும்?
என்ன தான் பிரச்னை!

அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான வர்த்­த­கப் போர் முடி­வ­டை­யும் நிலை­யில் உள்­ளது. இரு நாடு­கள் இடையே, முதல் வர்த்­தக ஒப்­பந்­தம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கிறது.சீனா­வில், நுால் மற்­றும் ஜவுளி ஆலை­கள் ஏரா­ள­மாக உள்­ளன. சீனா­வி­டம் பஞ்சு கையி­ருப்­பில் இல்­லா­த­தால், உலக அள­வில் அதி­க­ள­வில் பருத்தி உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளான, அமெ­ரிக்கா மற்­றும் இந்­தி­யா­வி­டம் இருந்து, அதி­க­ள­வி­லான பஞ்சை, இறக்­கு­மதி செய்­கிறது. ஏற்­க­னவே 20 லட்­சம் பேல்­கள்(ஒரு பேல் என்­பது 170 கிலோ) பஞ்சு, இந்­தி­யா­வில் இருந்து, ஏற்­று­மதி செய்­யப்­பட்­டி­ருக்­கிறது. ஏற்­று­மதி, 60 லட்­சம் பேல்­க­ளைத் தொடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சி.சி.ஐ., எனப்­படும் இந்­தி­யப் பருத்­திக்­க­ழ­கம் தான், பஞ்­சைப் பெறு­வ­தற்­கான, மூலா­தா­ர­மாக, நுாற்­பா­லை­க­ளுக்கு உள்­ளன. சந்­தை­யில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, 40 ஆயி­ரம் ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. ஆனால், சி.சி.ஐ., நிர்­ண­யித்­துள்ள விலையோ 46 ஆயி­ரம் ரூபாய்.



தென்­னிந்­திய மில்­கள் சங்க(சைமா) தலை­வர் அஸ்­வின் சந்­தி­ரன், மத்­திய ஜவு­ளித்­துறை அமைச்­சர் ஸ்மி­ருதி இரா­னி­யி­டம், ‘‘சி.சி.ஐ.,செயல்­ப­டுத்­தும் வர்த்­த­கக் கொள்­கை­யில் தலை­யிட வேண்­டும். சந்தை விலைக்­குப் பஞ்சை வழங்க வேண்­டும்; இதன் மூலம், விலை உயர்­வைத் தடுக்க முடி­வ­தோடு, அனைத்து குறு, சிறு, நடுத்­தர நுாற்­பா­லை­கள் பஞ்­சைக் கொள்­மு­தல் செய்ய முடி­யும்’’ என்று முறை­யிட்­டி­ருக்­கி­றார்.
சி.சி.ஐ., சொல்வதென்ன!

அதே­ச­ம­யம், ‘சைமா’வின் கோரிக்­கையை, சி.சி.ஐ., ஏற்­க­வில்லை. சி.சி.ஐ., சேர்­மன் அல்­லி­ராணி, ‘‘சி.சி.ஐ., அரசு நிறு­வ­னம். தர­மான பஞ்­சையே கொள்­மு­தல் செய்­கிறது. ஒரு கேண்டி பஞ்சு,40 ஆயி­ரத்­துக்கு கிடைக்­கிறது என்­றால், அது இரண்­டாம்­த­ரப் பஞ்சு. சி.சி.ஐ., பருத்­தி­யைப் பதுக்­க­வில்லை. சந்­தைக்கு வரும் பஞ்­சில் தற்­போது, 50 சத­வீ­தம் வரை வாங்­கு­கி­றோம். சி.சி.ஐ., பஞ்சை நஷ்­டத்­துக்கு விற்க முடி­யாது’ என்று கூறு­கி­றார்.
நுாற்பாலைகள் கவலை
‘‘ஏற்­க­னவே, 26 முதல் 28 சத­வீ­தம் வரை, குறைந்­த­பட்ச ஆதார விலை­யில் உயர்வு ஏற்­பட்­டுள்­ளது. பஞ்சு கூடு­தல் விலை கொடுத்து வாங்­கப்­பட்­டால், அது நுாற்­பா­லை­க­ளுக்­குக் கட்­டு­ப­டி­யா­காது. ஏற்­க­னவே, நுாற்­பா­லை­கள் நெருக்­க­டி­யில் தவிக்­கின்­றன. இச்­சூ­ழ­லில், சி.சி.ஐ., செயல்­ப­டுத்­தும் வர்த்­தக நடை­முறை, மோச­மான சூழ­லையே ஏற்­ப­டுத்­தும். அரசு நிறு­வ­னம், இது­போன்ற தரு­ணங்­களில், நுாற்­பா­லை­க­ளுக்கு உதவ வேண்­டும். ஆனால், அரசு நிறு­வ­னமே கைவி­ரித்­தால் என்ன செய்­வது?’’ என்று, நுாற்­பாலை உரி­மை­யா­ளர்­கள், கேள்வி எழுப்­பு­கின்­ற­னர்.நுாற்­பா­லை­க­ளின் பஞ்சு தொடர்­பான பிரச்­னைக்­குச் சுமு­கத் தீர்வு காண, மத்­திய அரசு முயற்­சிக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)