பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:08
கட்டடத்தின் பாதுகாப்பு மற்றும் அழகுபடுத்தும் வகையில், ‘கிரில்’ பாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் அழகு பாகங்கள், பாதுகாப்பு ரீதியான பாகங்கள் ஆகியவற்றை வார்ப்பு இரும்பு உலோகங்கள், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ உள்ளிட்டவை மூலம் கிரில் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் உருவாக்கிவருகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரில் தயாரிப்பு தொழிற்கூடங்களில், கோவை மாவட்டத்தில் உள்ள, 3200 தொழிற்கூடங்களும் அடங்கும். இந்நிலையில், கிரில் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, மின் கட்டணத்துக்கான, ‘டேரிப்’பை மாற்றியமைத்து கிரில் தொழிலுக்கு அரசு ‘பவர்’ அளித்துள்ளது.
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க நிறுவனர் தலைவர் ரவி கூறியதாவது:கிரில், வெல்டிங் குறுந்தொழிலுக்கு பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை, 500 யூனிட் வரை இலவசமாகவும், மின் கட்டணத்துக்கான, 3பி ‘டேரிப்’பில் இருந்து, 3ஏ ஆக மாற்றித்தர அரசிடம் வேண்டுகோள்விடுத்தோம். 500 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பது அரசின் கொள்கை முடிவு என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.பொருட்கள் உற்பத்தி அல்லது தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குடிசை, குறுந்தொழில்கள், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 12 கிலோவாட்டுக்கு மிகாமல் இருப்பின், 3ஏ(I)ல் மின் இணைப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ‘வெல்டிங்’ மூலம் தொழில் செய்பவர்களுக்கு வசூலிக்கப்பட்டுவந்த, 3பி டேரிப் தற்போது, 3ஏ(I) ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது; இது, மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, ஒரு யூனிட்டுக்கு(ஜி.எஸ்.டி., உட்பட), 10 ரூபாய், 40 காசு மின் கட்டணம் செலுத்திவந்தோம். மாற்றியமைக்கப்பட்ட டேரிப்பின் படி இதில் பாதி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்; கிரில் தொழில் வளர்ச்சிக்கு இது உதவும்.இவ்வாறு, ரவி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|