‘கிரில்’ தொழிலுக்கு ‘பவர்’ தரும் ‘டேரிப்’ மாற்றம்: தயாரிப்பாளர்கள் உற்சாகம்‘கிரில்’ தொழிலுக்கு ‘பவர்’ தரும் ‘டேரிப்’ மாற்றம்: தயாரிப்பாளர்கள் ... ... கற்பனையை நிஜமாக்க ஆடை டிசைன் ஸ்டுடியோ!   திருப்பூர் ஏற்றுமதி இலக்கு எளிதில் எட்ட வாய்ப்பு கற்பனையை நிஜமாக்க ஆடை டிசைன் ஸ்டுடியோ! திருப்பூர் ஏற்றுமதி இலக்கு ... ...
ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்கல் தேதி மாற்றியமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
17:09

சரக்கு மற்­றும் சேவை வரி­யா­னது (ஜி.எஸ்.டி.,), ஜி.எஸ்.டி.ஆர்., 1 மற்­றும் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) ஆகிய இரு பிரி­வு­களில் மாதம் தோறும் தாக்­கல் செய்­யப்­பட்டு வரு­கிறது. ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) பொறுத்­த­வரை மாதம்­தோ­றும், 20ம் தேதிக்­குள் தாமத கட்­ட­ணம் இல்­லா­மல் தாக்­கல் செய்­ய­லாம்.
ஆனால், வரி செலுத்­து­வோர் பெரும்­பா­லும் கடைசி நேரத்­தில் தாக்­கல் செய்­வ­தால், ‘சர்­வர்’ பிரச்னை, குறித்த காலத்­துக்­குள் தாக்­கல் செய்­யாத பட்­சத்­தில் தாமத கட்­ட­ணம் உள்­ளிட்ட பாதிப்­பு­களை சந்­திக்க நேரி­டு­கிறது. வரி செலுத்­து­வோர் வச­திக்­காக ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்­கல் செய்­யும் தேதி­களில் ஜி.எஸ்.டி., கவுன்­சில் சில மாற்­றங்­கள் செய்­துள்­ளது.
அதன்­படி ஆண்டு வரு­வாய், 5 கோடி ரூபாய்க்கு மேல் உள்­ள­வர்­கள் மாதம்­தோ­றும், 20ம் தேதிக்­குள் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்­கல் செய்ய வேண்­டும் என்­ப­தில் மாற்­ற­மில்லை; 5 கோடி ரூபாய்க்­கும் கீழ் வரு­வாய் உள்­ள­வர்­கள் இரு பிரி­வு­களில் செலுத்த வேண்­டும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தமிழ்­நாடு, மத்­திய பிர­தே­சம், குஜ­ராத், மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, கோவா, கேரளா, புதுச்­சேரி, அந்­த­மான் நிகோ­பார் தீவு­கள், ஆந்­திரா உட்­பட, 15 மாநி­லங்­களை சேர்ந்த, 5 கோடி ரூபாய்க்­கும் கீழ் வரு­வாய் உள்­ள­வர்­கள், மாதம் தோறும், 22ம் தேதிக்­குள் தாக்­கல் செய்ய வேண்­டும்.ஜம்மு– காஷ்­மீர், லடாக், பஞ்­சாப், ராஜஸ்­தான், டில்லி, பீகார், திரி­புரா, இமாச்­ச­ல­பி­ர­தே­சம், சண்­டி­கர், அரி­யானா, சிக்­கிம், அரு­ணாச்­ச­ல­பி­ர­தேசம் என இதர, 22 மாநி­லங்­களை சேர்ந்து, 5 கோடிக்­கும் கீழ் ஆண்டு வரு­வாய் உள்­ள­வர்­கள், 24ம் தேதி வரை ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்­கல் செய்­ய­லாம் என, தேதி­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன.
கோவை ஜி.எஸ்.டி., ஆணை­ய­ரக அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘மாதம்­தோ­றும், 8 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர், 5 கோடிக்­கும் அதி­க­மான வரு­வாய் உடன் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்­கல் செய்து வரு­கின்­ற­னர். 5 கோடிக்­கும் குறை­வான வரு­வாய் உடன், 95 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர் ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) தாக்­கல் செய்­து­வ­ரு­கின்­ற­னர். இறுதி நேரத்­தில் ஏற்­படும் அலைச்­ச­லை­யும், சிர­மத்­தை­யும் தவிர்க்க இதற்­கான தாக்­கல் தேதி­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளன’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)