பதிவு செய்த நாள்
06 பிப்2020
00:33
நொய்டா:இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீதான சுங்க வரி உயர்வு எதற்காக என, கேள்வி எழுப்பி உள்ளார், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுக்கவா.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீதான சுங்க வரியை எதற்காக அதிகப்படுத்தி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை.
மின்சார வாகன தயாரிப்பை உள்ளூர்மயமாக்குவது என்பது அவசியமான ஒன்று தான். ஆனால், குறுகிய காலத்தில் உள்ளூர்மயமாக்குவது என்பது எளிதான விஷயமல்ல.நாம்
பலவற்றை மாற்ற வேண்டியதிருக்கிறது. மின்சார தயாரிப்பில் கூட, இன்னும் நாம்
நிலக்கரியை பயன்படுத்தி வருகிறோம். அதுவும் சூழலை மாசுபடுத்துகிறது.
மின்சார வாகனத்துக்கு மாறும்போது, பாதுகாப்பு விஷயங்கள், ‘பேட்டரி’ தொழில்நுட்ப
மேம்பாடு ஆகியவை குறித்தும் மனதில் கொள்ள வேண்டும்.எங்களை பொறுத்தவரை,
மின்சார வாகன தயாரிப்பு குறித்து மறுபரிசீலனை செய்கிறோம். இந்த சமயத்தில், மலிவு விலையில் மின்சார வாகனத்தை தயாரித்தளிப்பது என்பது எளிதானதல்ல. தற்போதைய நிலையில், எங்களால் பெருமளவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாருதி சுசூகி, அதன், ‘வேகன் ஆர்’ வாகனத்தை, மின்சார வாகனமாகவும் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இப்போது அது குறித்து மறுபரிசீலனை செய்து வருகிறது. சகாய விலையில் மின்சார வாகனத்தை தயாரிப்பது சவாலான ஒன்று என, இந்நிறுவனம் தற்போது கருதுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|