பதிவு செய்த நாள்
07 பிப்2020
23:56
சென்னை:‘‘தமிழக அரசின், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான தொழில் முதலீட்டு மானியம் திட்டத்தில், ஆண்டுக்கு 8,000 பேர் பயன் அடைகின்றனர்,’’ என தொழில் வணிகத் துறை கமிஷனர் அனு ஜார்ஜ் தெரிவித்தார்.
கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தொழில்முனைவோருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தொழில் வணிகத் துறை கமிஷனர் அனு ஜார்ஜ் பேசியதாவது:தமிழக அரசு, புதிய தொழில் முனைவோருக்கு, ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடன் வசதி உடன், முதலீட்டு மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 8,000 பேர் பயனடைகின்றனர். நிறுவனம் துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது.இதைப் பயன்படுத்தி புதிய தொழில்களை, தொழில் முனைவோர் துவங்க வேண்டும்.
சென்னையில், புதிய தொழில் துவங்குவதும், அவற்றுக்கு கடன் பெறுவதும் குறைவாகவே உள்ளது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள், புதிய தொழில் முனைவோருக்கு, அதிகளவில் கடன் வழங்க வேண்டும். கடன் பெறுவோர், முறையாக திரும்ப செலுத்தினால், வங்கிகளுக்கு நம்பிக்கை ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|