பதிவு செய்த நாள்
08 பிப்2020
00:00
மும்பை:‘‘அமலுக்கு வர உள்ள, புதிய வருமான வரி திட்டத்திற்கு, வரி செலுத்துவோரில், 80 சதவீதம் பேர் மாறுவர்,’’என, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சுலபமாக வருமான வரி செலுத்துவதற்காக, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி கிடையாது. வரிக் கழிவுகள், தள்ளுபடிகள் இல்லாதபோதிலும், ஒருவர் குறிப்பிட்ட வரித் தெகையை சேமிக்க முடியும்.
இதுநாள் வரை, வரிக் கழிவு, தள்ளுபடிக்காக, கட்டாய சேமிப்பு மேற்கொண்டு வருவோருக்கு இனி அந்த நெருக்கடி இருக்காது. பட்ஜெட் தயாரிப்புக்கு முன், வரி செலுத்துவோரில், 5,78 கோடி பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 69 சதவீதம் பேர், ‘புதிய திட்டத்தில், வரியை சேமிக்க முடியும்’ என, தெரிவித்தனர். 11 சதவீதம் பேர், தற்போதைய வரி நடைமுறையே தங்களுக்கு உகந்தது என்றனர்.
எஞ்சிய, 20 சதவீதம் பேரில் பலர், வருமான வரியை கணக்கிட்டு செலுத்துவதில் உள்ள சிரமம் கருதி, புதிய நடைமுறைக்கு வருவர் என, தெரிகிறது. இந்த வகையில், 80 சதவீதம் பேர், புதிய வருமான வரி திட்டத்திற்கு மாறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வருமான வரி திட்டத்தில், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|