முதலீட்டு மானியத்தில் 8,000   பேர் பயன் முதலீட்டு மானியத்தில் 8,000 பேர் பயன் ...  பற்றாக்குறையில் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியம்:மாநிலங்களுக்கு ரூ.70,000 கோடி நிலுவை பற்றாக்குறையில் ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியம்:மாநிலங்களுக்கு ரூ.70,000 கோடி ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘புதிய வருமான வரிக்கு 80 80 சதவீதம் பேர் மாறுவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2020
00:00

மும்பை:‘‘அமலுக்கு வர உள்ள, புதிய வருமான வரி திட்டத்திற்கு, வரி செலுத்துவோரில், 80 சதவீதம் பேர் மாறுவர்,’’என, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சுலபமாக வருமான வரி செலுத்துவதற்காக, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி கிடையாது. வரிக் கழிவுகள், தள்ளுபடிகள் இல்லாதபோதிலும், ஒருவர் குறிப்பிட்ட வரித் தெகையை சேமிக்க முடியும்.


இதுநாள் வரை, வரிக் கழிவு, தள்ளுபடிக்காக, கட்டாய சேமிப்பு மேற்கொண்டு வருவோருக்கு இனி அந்த நெருக்கடி இருக்காது. பட்ஜெட் தயாரிப்புக்கு முன், வரி செலுத்துவோரில், 5,78 கோடி பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 69 சதவீதம் பேர், ‘புதிய திட்டத்தில், வரியை சேமிக்க முடியும்’ என, தெரிவித்தனர். 11 சதவீதம் பேர், தற்போதைய வரி நடைமுறையே தங்களுக்கு உகந்தது என்றனர்.


எஞ்சிய, 20 சதவீதம் பேரில் பலர், வருமான வரியை கணக்கிட்டு செலுத்துவதில் உள்ள சிரமம் கருதி, புதிய நடைமுறைக்கு வருவர் என, தெரிகிறது. இந்த வகையில், 80 சதவீதம் பேர், புதிய வருமான வரி திட்டத்திற்கு மாறுவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வருமான வரி திட்டத்தில், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)