பதிவு செய்த நாள்
09 பிப்2020
00:58
கோல்கட்டா:வரும், 2020- – 21ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பொம்மைகள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து, மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில், பொம்மை வியாபாரிகள், நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, மேற்குவங்க ஏற்றுமதி – இறக்குமதி கூட்டமைப்பின் இணை செயலர்மோஹித் பந்தியா கூறியதாவது:பொம்மைகளுக்கு இறக்குமதி வரி, 20 சதவீதத்தில் இருந்து, 60 சதவீத மாக உயர்த்தப்பட்டுள்ளது.வரி, 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பொம்மை விற்பனையில் ஈடுபட்டுள்ள, ஒரு லட்சத்திற்கும் அதிகமான சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.
அதனால், மத்திய அரசு உடனடியாக, பொம்மை இறக்குமதி வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். இது குறித்து, இன்று, கோல்கட்டா வரும், மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இந்தியா, ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இறக்குமதி செய்கிறது.இதில், கோல்கட்டாவின் பங்கு, 130 கோடி ரூபாய். இறக்குமதியாகும் பொம்மைகளில், சீனாவின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|