வருமான வரி விகிதத்தை தேர்வு செய்யும் வழிவருமான வரி விகிதத்தை தேர்வு செய்யும் வழி ... புதிய வரு­மான வரி விகி­தம் யாருக்கு பலன் அளிக்­கும்? புதிய வரு­மான வரி விகி­தம் யாருக்கு பலன் அளிக்­கும்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீண்ட கால நோக்­கில் முத­லீடு செய்­வ­தன் அவ­சி­யம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2020
23:58

முத­லீ­டு­கள், நீண்ட கால நோக்­கில் அமை­வது நல்­லது என்று, நிதி உல­கில் தொடர்ந்து
வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கிறது. அதே நேரத்­தில், நீண்ட கால நோக்­கி­லான முத­லீ­களை நாடு­வ­தன் மூலம், செல்வ வளத்தை உரு­வாக்கி கொள்ள முடி­யும் என்­றும் வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.
நீண்ட கால நோக்­கி­லான அணு­கு­மு­றை­யின் பலன்­கள் மற்­றும் இது
தொடர்­பான இடர்­தன்மை ஆகிய அம்­சங்­களை பார்க்­க­லாம்:

என்ன தேவை?


முத­லீடு செய்­வ­தன் நோக்­கமே, அதன் மூலம் பலன் பெற வேண்­டும் என்­பது தான். முத­லீடு செய்­யும் பணம், நீங்­கள் எதிர்­பார்க்­கும் தேவையை நிறை­வேற்ற வேண்­டும் எனில், அதற்­கான அவ­கா­சம் தேவை. குறு­கிய காலத்­தில் இதை சாதிக்க முடி­யாது. மேலும், குறு­கிய கால முத­லீ­டு­கள், பெரும்­பா­லும் உணர்ச்சி வயப்­பட்­ட­தாக அமை­ய­லாம்.

கடந்த கால பாடம்:


நிதி உல­கம் அவ்­வப்­போது, நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கிறது. இந்த நெருக்­க­டி­கள்
சந்­தை­யில் தாக்­கம் செலுத்தி முத­லீ­டு­க­ளை­யும் பாதிக்­கின்­றன. ஆனால், நீண்ட கால
நோக்­கில் முத­லீடு செய்­த­வர்­களே, இந்த நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லும், வெற்­றி­க­ர­மாக
முத­லீட்­டின் பலனை அறு­வடை செய்­த­வர்­க­ளாக இருப்­பதை உண­ர­லாம்.

சார்பு இல்லை:


முத­லீடு செய்­யும் போது, பேராசை மற்­றும் அச்­சம் ஆகிய உணர்­வு­க­ளுக்கு இலக்­காக
வாய்ப்­புள்­ளது. குறு­கிய கால பலனை கருத்­தில் கொள்­ளும் போது, இந்த உணர்­வு­க­ளின் சார்பு, தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வைக்­க­லாம். உதா­ர­ண­மாக, அச்­சம் கார­ண­மாக,
நஷ்­டத்­தில் பங்­கு­களை விற்­க­லாம்.


ஆய்­வு­கள் சொல்­வது:


பங்­குச்­சந்­தையை கணித்து செயல்­ப­டு­வது சாத்­தி­யம் இல்லை என்றே, பல்­வேறு ஆய்­வு­கள் சொல்­கின்­றன. எனவே, குறு­கிய கால உத்தி, பாதிப்பை உண்­டாக்­க­லாம். நீண்ட கால நோக்­கில் செயல்­ப­டும்­போது, சந்தை சுழற்­சியை எதிர்­கொண்டு பலன் பெற வாய்ப்­புள்­ளது. சரி­வு­களின்,
பாதிப்­பி­லி­ருந்­தும் மீள்­வது சாத்­தி­யம்.


இடர் உண்டு:


நீண்ட கால நோக்­கில் பலன்­கள் மட்­டும் அல்ல, இடர்­களும் உண்டு. எதிர்­பா­ராத நிகழ்­வு­க­ளின் தாக்­கம், எதிர்­பா­ராத செல­வு­கள் என, பல­வி­த­மான இடர்­கள் ஏற்­ப­ட­லாம். எதிர்­கா­லத்தை கணிக்­க­வும் முடி­யாது. எனி­னும், ஒரு நல்ல நிதி திட்­டம், நேர்­நிறை மற்­றும் எதிர்­மறை
அம்­சங்­கள், இரண்­டை­யுமே கருத்­தில் கொண்­டி­ருக்­கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)