பதிவு செய்த நாள்
09 பிப்2020
23:58
முதலீடுகள்,
நீண்ட கால நோக்கில் அமைவது நல்லது என்று, நிதி உலகில் தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நீண்ட கால நோக்கிலான முதலீகளை நாடுவதன் மூலம், செல்வ வளத்தை உருவாக்கி கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
நீண்ட கால நோக்கிலான அணுகுமுறையின் பலன்கள் மற்றும் இது
தொடர்பான இடர்தன்மை ஆகிய அம்சங்களை பார்க்கலாம்:
என்ன
தேவை?
முதலீடு செய்வதன் நோக்கமே, அதன் மூலம் பலன் பெற வேண்டும்
என்பது தான். முதலீடு செய்யும் பணம், நீங்கள் எதிர்பார்க்கும் தேவையை
நிறைவேற்ற வேண்டும் எனில், அதற்கான அவகாசம் தேவை. குறுகிய
காலத்தில் இதை சாதிக்க முடியாது. மேலும், குறுகிய கால முதலீடுகள்,
பெரும்பாலும் உணர்ச்சி வயப்பட்டதாக அமையலாம்.
கடந்த கால பாடம்:
நிதி உலகம் அவ்வப்போது, நெருக்கடிகளை சந்தித்து
வருகிறது. இந்த நெருக்கடிகள்
சந்தையில் தாக்கம் செலுத்தி
முதலீடுகளையும் பாதிக்கின்றன. ஆனால், நீண்ட கால
நோக்கில் முதலீடு
செய்தவர்களே, இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக
முதலீட்டின் பலனை அறுவடை செய்தவர்களாக இருப்பதை உணரலாம்.
சார்பு இல்லை:
முதலீடு செய்யும் போது, பேராசை மற்றும் அச்சம் ஆகிய உணர்வுகளுக்கு இலக்காக
வாய்ப்புள்ளது. குறுகிய கால பலனை கருத்தில் கொள்ளும் போது, இந்த உணர்வுகளின் சார்பு, தவறான முடிவுகளை மேற்கொள்ள வைக்கலாம். உதாரணமாக, அச்சம் காரணமாக,
நஷ்டத்தில் பங்குகளை விற்கலாம்.
ஆய்வுகள்
சொல்வது:
பங்குச்சந்தையை கணித்து செயல்படுவது சாத்தியம் இல்லை
என்றே, பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, குறுகிய கால உத்தி,
பாதிப்பை உண்டாக்கலாம். நீண்ட கால நோக்கில் செயல்படும்போது, சந்தை சுழற்சியை எதிர்கொண்டு பலன் பெற வாய்ப்புள்ளது. சரிவுகளின்,
பாதிப்பிலிருந்தும் மீள்வது சாத்தியம்.
இடர் உண்டு:
நீண்ட கால நோக்கில் பலன்கள் மட்டும் அல்ல, இடர்களும் உண்டு. எதிர்பாராத நிகழ்வுகளின் தாக்கம், எதிர்பாராத
செலவுகள் என, பலவிதமான இடர்கள் ஏற்படலாம். எதிர்காலத்தை
கணிக்கவும் முடியாது. எனினும், ஒரு நல்ல நிதி திட்டம், நேர்நிறை
மற்றும் எதிர்மறை
அம்சங்கள், இரண்டையுமே கருத்தில் கொண்டிருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|