பதிவு செய்த நாள்
11 பிப்2020
23:36
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள், கடந்த ஜனவரி மாதத்தில், 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:வெளிநாடுகளில், இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள், கடந்த ஜனவரி மாதத்தில், 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மொத்தம், 2.10 பில்லியன் டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், இந்திய நிறுவனங்கள் செய்த முதலீடு, 10 ஆயிரத்து, 437 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட முதலீடு, 14 ஆயிரத்து, 129 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஜனவரி மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், மொரீஷியஸில் உள்ள அதன் துணை நிறுவனத்தில், 1,757 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அடுத்து, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், நெதர்லாந்தில் உள்ள அதன் துணை நிறுவனத்தில், 1,605 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
அடுத்து, ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், பெல்ஜியத்தில், 625 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|