பதிவு செய்த நாள்
11 பிப்2020
23:38
புதுடில்லி:லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குகளை, அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று அதிகளவில் வாங்க இருப்பதாக செய்திகள் கசிந்ததை அடுத்து, வங்கியின் பங்குகள் விலை, 10 சதவீதம் அளவுக்கு நேற்று அதிகரித்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான, ‘டில்டன் பார்க் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், லக்ஷ்மி விலாஸ் வங்கி பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.லக்ஷ்மி விலாஸ் வங்கி பங்குகளை வாங்குவது குறித்து ரிசர்வ் வங்கியிடம், டில்டன் பார்க் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதற்கு முன், லக்ஷ்மி விலாஸ் வங்கியை, இண்டியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டபோது, ரிசர்வ் வங்கி, அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இப்போது, ஆறு மாதங்களுக்கு பின், இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|