பதிவு செய்த நாள்
11 பிப்2020
23:40
புதுடில்லி:கடந்த ஆண்டில் மட்டும், 30 லட்சம் புதிய முதலீட்டாளர்களை சேர்த்துள்ளதாக, என்.எஸ்.இ., எனும், தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து என்.எஸ்.இ., மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டில், புதிதாக, 30 லட்சம் முதலீட்டாளர்கள் சேர்ந்து உள்ளனர். இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 4.5 சதவீதம் அதிகமாகும்.மேலும், கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, பதிவுபெற்ற முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை, 3 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த, 5 ஆண்டுகளில் மட்டும், புதிய முதலீட்டாளர்களின் பதிவு எண்ணிக்கை, 1.2 கோடியை தாண்டிஉள்ளது.அடுத்த மூன்று ஆண்டு களில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 5 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, என்.எஸ்.இ., நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் லிமாயே கூறியதாவது:இது நாட்டின் பொருளாதாரத்துக்கு சாதகமான அறிகுறியாகும். வீட்டு சேமிப்புகள், சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், மூலதன உருவாக்கத்துக்கு அது உதவுவதாக அமைகிறது. மேலும், பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உணர்த்துவதாகவும் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|