பதிவு செய்த நாள்
12 பிப்2020
23:32
புதுடில்லி:விவசாயப் பொருட்கள், உலோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான, ‘கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்’களில் ஒன்றான, என்.சி.டி.எக்ஸ்., புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. இதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டில், 100 கோடி ரூபாய் மதிப்புக்கு, புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும், 1.44 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது இந்நிறுவனம்.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 500 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
என்.சி.டி.எக்ஸ்., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் மற்றும் எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|