பதிவு செய்த நாள்
12 பிப்2020
23:33
திடக்கழிவு மறுசுழற்சி மற்றும் மேலாண்மை பணிகளுக்காக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டை மனைகளில், 5 சதவீத நிலத்தை ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்புகள், தொழில் பகுதிகள், வணிக வளாகங்களில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான விதிகளை, மத்திய அரசு, 2016ல் பிறப்பித்தது. இதன்படி, மாநில அரசுகள் சார்ந்த துறைகள் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளன.இந்த விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், தொழில் பேட்டைகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடக்க, உரிய இட வசதியை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக, இந்த வளாகங்களின் மனைகளில், 5 சதவீத நிலத்தை ஒதுக்க வேண்டும்.இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, வரைபடத்தில் இவ்வாறு நிலம் ஒதுக்கப்பட்டுஉள்ளதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்த நடைமுறைகளை, தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனமான, ‘சிட்கோ’ மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான, ‘சிப்காட்’ ஆகியவற்றுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|